திங்கள், 4 பிப்ரவரி, 2013

அகம்புறம் - எரிகிறது




எரிகிறது
உடலெங்கும் பற்றி எரிகிறது
மூடிய இமைகள் தாண்டி வெப்பம் விழி தாக்குகிறது
இருட்டு அறைக்குள் முழு வெளிச்சம்
ஒன்றும் விளங்கவில்லை
கதகதப்பின் வெப்பம் கூடுகிறது
மனித சம்பாசனைகள் குறைந்து
தீ சுவாலை காதுகளை அடைக்கிறது
விரைத்த கால்கள் தானாக மேலெலுகிறது
தாடாலென ஒரு அடி
யாரது என் கால்களை அடித்தது
இந்த வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை
இத்தனை விறகுகளை என் மீது கொட்டியது யார்?
என் கட்டை விரல்களை கட்டி தீயிட்டது யார்?
என் இதயம் நின்று விட்டதா?
என் உதிரத்துளிகளின் ஓட்டம் ஓய்ந்து விட்டதா?
ஓ நான் இறந்து விட்டேனா!

1 கருத்து: