கடவுள்.
பயத்திற்கும் நம்பிக்கைக்குமான மையப்புள்ளி.
உன்னை நீ நம்பாதவரை, உனக்காக பழியேற்க நீ காட்டும் ஒரு காரணம்.
உனது எல்லா காரியங்களுக்கும் அவரே பொறுப்பேற்பார்.
அவரின் பெயரால் நீ செய்யும் எல்லாமும் புனிதமே ஆகும்.
எத்தனை உயிர்கள் இறந்தால் என்ன?
அதைத்தான் நீ கடவுளின் பெயரால் அல்லவா செய்கிறாய்.
அதனால் நீ மன்னிக்க தேவையற்றவனாவாய்.
வேலியின் பெயரால் விலங்கு பூட்டி திரியும்.
கால் போனாலும் போகட்டும் கடிக்கின்ற செருப்பை மட்டும் கழட்டிவிடாதீர்.
எல்லோரையும் கொன்றபின் என் உயிர் மீதமிருக்கும் கடவுளின் பெயரால்
அதயும் நீ எடுத்துக்கொள்.
சுடுகாட்டின் மத்தியில் உங்கள் ஆட்சியை அமையுங்கள். அங்கு உங்கள்
கடவுளே அரசாளட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக