திங்கள், 4 பிப்ரவரி, 2013

அகம்புறம் - கடவுள்



கடவுள்.
பயத்திற்கும் நம்பிக்கைக்குமான மையப்புள்ளி.
உன்னை நீ நம்பாதவரை, உனக்காக பழியேற்க நீ காட்டும் ஒரு காரணம்.
உனது எல்லா காரியங்களுக்கும் அவரே பொறுப்பேற்பார்.
அவரின் பெயரால் நீ செய்யும் எல்லாமும் புனிதமே ஆகும்.
எத்தனை உயிர்கள் இறந்தால் என்ன?
அதைத்தான் நீ கடவுளின் பெயரால் அல்லவா செய்கிறாய்.
அதனால் நீ மன்னிக்க தேவையற்றவனாவாய்.
வேலியின் பெயரால் விலங்கு பூட்டி திரியும்.
கால் போனாலும் போகட்டும் கடிக்கின்ற செருப்பை மட்டும் கழட்டிவிடாதீர்.
எல்லோரையும் கொன்றபின் என் உயிர் மீதமிருக்கும் கடவுளின் பெயரால் அதயும் நீ எடுத்துக்கொள்.
சுடுகாட்டின் மத்தியில் உங்கள் ஆட்சியை அமையுங்கள். அங்கு உங்கள் கடவுளே அரசாளட்டும்.

அகம்புறம் - எரிகிறது




எரிகிறது
உடலெங்கும் பற்றி எரிகிறது
மூடிய இமைகள் தாண்டி வெப்பம் விழி தாக்குகிறது
இருட்டு அறைக்குள் முழு வெளிச்சம்
ஒன்றும் விளங்கவில்லை
கதகதப்பின் வெப்பம் கூடுகிறது
மனித சம்பாசனைகள் குறைந்து
தீ சுவாலை காதுகளை அடைக்கிறது
விரைத்த கால்கள் தானாக மேலெலுகிறது
தாடாலென ஒரு அடி
யாரது என் கால்களை அடித்தது
இந்த வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை
இத்தனை விறகுகளை என் மீது கொட்டியது யார்?
என் கட்டை விரல்களை கட்டி தீயிட்டது யார்?
என் இதயம் நின்று விட்டதா?
என் உதிரத்துளிகளின் ஓட்டம் ஓய்ந்து விட்டதா?
ஓ நான் இறந்து விட்டேனா!